8
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பொன்னமராவதி ஆய்வாளர் கருணாகரன் அவர்கள் தலைமையில், எம தர்மன் போன்ற வேடம் அணிந்த ஒருவர் மூலம் வித்தியாசமாக ஹெல்மெட் மற்றும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை எம தர்ம ராஜா கருப்பு கயிறு கொண்டு இழுப்பது போலவும், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு எம தர்மன் இனிப்பு கொடுப்பது போலவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை நடத்திய காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
You must be logged in to post a comment.