இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவியது. உயர் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர்களில் உவர் ஈரப்பதம் படிவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜூலை 8, 9, 10 தேதிகளில் மின்சாரம் தடைபட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ராமேஸ்வரம் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் வியாபாரம் பாதிப்பால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். அடிக்கடி தடைபடும் மின் விநியோகத்தை சீர் செய்வதில் தமிழக மின்வாரியத்தின் தொடர் அலட்சியபோக்கு, அ.தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் முன் இன்று (13/7/19) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். திமுக முன்னணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வியாபாரிகள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். இராமேஸ்வரம் நகர் திமுக செயலாளர் கே.இ.நாசர்கான் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.