8
மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் கீதா லெட்சுமி மதுரை ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மேல்நிலை பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் ஆபத்து காலங்களில் எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மேலும் தற்காப்பு கலைகளைகள் பற்றிய செய்முறை பயிற்சியும் கொடுத்தார். முக்கியமாக POCSO சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் எனவும் விளக்கம் கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் 300 – க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.