Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

by ஆசிரியர்

தூத்துக்குடி.தளவாய்புரம், மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (53)தகப்பனார் பெயர் அழகர், இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும்,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக கைகால் பக்கவாதம் ஏற்பட்டதால் வேலைக்குப் போகாமல் இருந்துள்ளார், இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. நோய் தீர கோவிலுக்கு சென்று பூஜை செய்து வருவது இவருடைய வழக்கம். நேற்று மாலை 6 மணிக்கு அவ்வாறு சென்றவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர்,

இந்நிலையில் பதில்பக்கவாத நோயினால் மனம்வருந்திய அவர் புலி பாஞ்சான் குளம், வணங்காமுடி அய்யனார் கோவில் அருகிலுள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதாக அவரது மகன் அய்யனார் வயது (22) என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!