8
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் மற்றும் காவல்துறையினர், அரசியல் கட்சி பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் அருகில் உள்ள வீரன் குளத்தில் தண்ணீரில் தத்தளித்தபடி இரண்டு சிறுவர்கள் அலறினர்.
அவர்களின் சத்தம் கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு குளத்தில் இறங்கி தத்தளித்த 2 சிறுவர்களை கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உடனடியாக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நீரில் தத்தளித்த இரு சிறுவர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.