11
இராமநாதபுரத்திற்கு வீரசேகர ராவ் ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு முதல் குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று (27/08/2018) நடைபெற்றது.
இதில் குடிநீர் கேட்டு இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் ஆர். காவனூர் கிராம மக்கள் காவிரி குடிநீர் வழங்க கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் வீரராகவிடம் மனு கொடுக்க காலிக்குடங்களுடன் பெண்கள் வந்தனர்.
அதே போல் இராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர் முகாமில் மனு கொடுக்க தொலைதூரத்தில் வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உணவு பொட்டலம் வழங்கினார்.
செய்தி:- முருகன், கீழை நியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.