6
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் பிள்ளையார் கோயில் தெரு காளிமுத்து மகன் ராமமூர்த்தி, 30. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இராமநாதபுரம், மதுரை, முதுகுளத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. போலீசார் தேடிய வந்ததையறிந்து ராமமூர்த்தி தலைமறைவானார். ஜூலை 24ல் சொந்த ஊர் திரும்பிய இவரை கீழத்தூவல் போலீசார் கைது செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.