வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழுவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சட்டபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி,காட்பாடி நீதித்துறை நடுவர் ஜெயசுதாகர்,வழக்கறிஞர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்
இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் பேசுகையில் குழந்தைகளுக்கு நல்ல தோடுதல் தீய தோடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்த வேண்டும் அப்போது தான் அவர்கள் தங்களை பாதுகாத்துகொள்ள முடியும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும் குழந்தைகள் தங்களிடம் யாராவது பாலியல் முறையில் தகாமல் நடந்துகொள்ள முயற்சி செய்தால் உடனடியாக தப்பி சென்று ஆசிரியர்களிடம் புகார் அளிக்க வேண்டும் இல்லையென்றால் காவல்துறையினர் அல்லது பொதுமக்களின் உதவியை நாடினால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எளிதில் தடுக்கலாம் குழந்தைகளும் துணிவாக செயல்பட வேண்டும் பாலியல் குற்றங்களுக்கு இடமளிக்காமல் யாராவது தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் அவர்களின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு வெளிகொண்டு வந்தால் சட்டபடி அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று பேசினார்
You must be logged in to post a comment.