Home செய்திகள் ராம ராஜ்ய ரத ஊர்வலம் விமர்சித்தவரை கைது செய்ய கோரி காவல் நிலையம் முற்றுகை..

ராம ராஜ்ய ரத ஊர்வலம் விமர்சித்தவரை கைது செய்ய கோரி காவல் நிலையம் முற்றுகை..

by ஆசிரியர்

ராம ராஜ்ய ஊர்வலத்தை விமர்சித்ததையும், பாம்பனை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கும் சமூகவலை தளத்தில் கொலை மிரட்டல் விடுத்த பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்ய கோரி ஏராளமான பாஜகவினர்கள் பாம்பன் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞர் தையூப் என்பவர் கடந்த 21ம் தேதி இராமேஸ்வரத்திற்கு வந்திருந்த ராம ராஜ்ய ரத ஊர்வளத்தை விமர்சித்தும், பாம்பன் பகுதியை சேர்ந்த பாஜகவினர்களுக்கு சமூகவலை தளத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாம்பன் தையூப் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாம்பன் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்காத காரணத்தினால் விமர்சனம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி பாம்பனில் இந்து அமைப்பை சேர்ந்த ஆண்களும் மற்றும் ஏராளமான பெண்களும் ஊர்வலமாக வந்து பாம்பன் காவல்நிலையம் முன் 1மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் காவல்துறை துணைகண்காணிப்பாளர் மகேஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் நாளை கைது செய்யப்படுவார் என வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் நாளை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவில்லையென்றால், பாம்பன் சாலை பாலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!