Home செய்திகள் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு விடிவு காலம் பிறக்கிறதா??

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு விடிவு காலம் பிறக்கிறதா??

by ஆசிரியர்

கீழக்கரை தாலுகாவில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனையாகும், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவத்திற்காக வந்து செல்கிறார்கள். ஆனாலும் ஊரில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள் மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரி பல மனுக்களை அரசின் கவனத்திற்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கீழக்கரை மருத்துவமனையின் நுழைவு வாயிலில் உள்ள மேற்கூரை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் துண்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் இங்கு வரும் வாகனங்கள், அதிலும் முக்கியமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிரமமான சூழல் இருந்து வந்தது.

தற்போது கீழக்கரை அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலில் உள்ள கூரைக்கான பராமரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதே போல் அரசு ஆம்புலன்ஸ் மற்றும் கார் வந்து நிற்க மூன்று அடி  நீளத்தில் நடை மேடையும் சரி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!