8
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வறுமையில் வாழும் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்திற்க்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் ஓட்டமடம்,கீழபொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வறுமையில் வாழும் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.