13
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருநாவுக்கரசுவின் மகள் செளந்தர்யா (18)இவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்வை சரியாக எழுதவில்லை.விரக்தியில் இருந்த மாணவி செளந்தர்யா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்வு பயத்தால் தமிழ்நாட்டில் ஒரு மாணவன், ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் காட்பாடி பகுதியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதுமிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைத்தறித்துறை அமைசசர் காந்தி முன்னாள் அமைச்சர் வீரமணி உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து ஆறுதல் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.