17
வேலூர் தனியார் சிஎம்சி மருத்துவமனை கார் பார்கிங்கில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கார் பார்க்கிங் பகுதிக்கு கிருமி நரசின் தெளிக்க மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்படி இன்று மாநகர நல அலுவலர் சித்ரசேனா மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலை அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இங்கு வந்து செல்லும் அனைவரும் கைகழுவ வேண்டும், கிருமி நாசினி தெளித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.