12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகர அக்ரஹாரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்தவன் யோகானந்தம் (39) இவன் டாக்டர் விஜய கோவிந்தராஜன் எம்.எம்.பி.எஸ்.டி.எல்.ஓ. என்று என்றுபோட்டு கொண்டு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளான். இது குறித்து இணை இயக்குநர் (மருத்துவம்) அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் குழு போலீசாருடன் இணைந்து நேற்று இரவு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் சென்று யோகானந்தத்தை கைது செய்து பிறகு சீல் வைத்தனர். இவருக்கு டாக்டர் படிப்பிக்கும் சம்மந்தம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது
You must be logged in to post a comment.