11
கடையநல்லூர் நகராட்சி ஆணையராக சுகாதார அலுவலர் நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக நகராட்சி ஆணையராக (பொ) பணியாற்றி வந்த தங்கபாண்டியன் பதவி உயர்வு பெற்று ராஜபாளையம் தேர்வு நிலை நகராட்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலராக பணியாற்றும் நாராயணன் நகராட்சி பொறுப்பு ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.ஆணையராக பொறுப்பு ஏற்ற நாராயணன் சுகாதார அலுவலருக்கு இளநிலை பொறியாளர் முரளி,வருவாய் ஆய்வாளர் துரை குமாரசாமி, நகரமைப்பு அலுவலர் ஹாஜா மைதீன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேலாளர் அலி பாத்திமா மற்றும் அனைத்து பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.