Home செய்திகள் பார்வைற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு 7 ஆண்டு சிறை

பார்வைற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு 7 ஆண்டு சிறை

by mohan

வந்தவாசி தாலுகா பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை ( 52), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு மோரக்கனியனூர் பகுதியை சேர்ந்த பார்வைற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்து நீதிபதி விஜயராணி தீர்ப்பு கூறினார். அதில், பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏழுமலையை போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!