16
மரங்களை வளர்ப்பதற்காக நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மறுபுறம் நிலங்களை விரிவாக்கம் செய்வதாக கூறி சாலை ஓரங்களில் உள்ள மரங்களை தீயிட்டு அழித்து வருகிறார்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலைத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை கொளுத்துவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் ?
நிலம் விரிவாக்கம் செய்வதற்கு இந்த மரங்கள் தடையாக இருக்கின்றன.மரத்தை எரித்து , இடத்தை ஆக்கிரமிக்கும் செயலுக்கு மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.