15
ஒரு வருடத்திற்கும் மேலாக ஆத்தூர் வட்டாட்சியராக பொருப்பு வகித்த ராஜகோபால் தமது பணி காலம் பூர்த்தி ஆனதை தொடர்ந்து வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யட்டுள்ளார்.
ராஜகோபால் பொறுப்பேற்றதில் இருந்து ஆத்தூர் தாலுகா மக்களிடமும் சரி தமது கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளிடமும் சரி மிகவும் அக்கறையோடும் கனிவோடும் நடந்து கொண்டவர். மக்களின் தேவை அறிந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பணிமாறுதல் செய்யட்டுள்ள காரணத்தால் ஆத்தூர் தாலுகா வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள், மற்றும் ஆத்தூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், அனைவரும் ஒன்று கூடி வட்டாட்சியர் திரு. ராஜகோபால் அவர்களுக்கு, பாராட்டு விழா நடத்தியதோடு மட்டும் அல்லாமல் அனைவரும் நன்றிகளை கூறி கொண்டனர்.
You must be logged in to post a comment.