செங்கம் பகுதியில் நள்ளிரவு வைத்த ஜெயலலிதா திருவுருவச்சிலை, வட்டாட்சியர் அகற்றியதால் பரபரப்பு..
செங்கம் பகுதியில் நள்ளிரவு வைத்த ஜெயலலிதா திருவுருவச்சிலை… வட்டாட்சியர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திருவண்ணாமலை _ பெங்களூர் செல்லும் சாலையின் ஓரம் அ.தி.மு.க மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர் சகிலா அவர்களின் ஏற்ப்பாட்டின் பெயரில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை கொண்டாடுவதற்க்காகவும், ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை நேற்று இரவு திடீரென வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் பார்த்தசாரதி செங்கம் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களின் உதவியோடு திருவுருவச் சிலையை பறிமுதல் செய்து டாடா வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.