திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.72 கோடியில் திட்டப் பணிகள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்..
திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் பகுதிகளில் ரூ.3.72 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் திறந்துவைக்கப்பட்டன.
செங்கம் அடுத்த கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட படவேடு ஊராட்சி பெருமாள்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், அலுவலகம், கணினி அறை, சாய்தளம், கழிப்பறை வளாகம் ஆகியவை ரூ.ஒரு கோடியே 52 லட்சத்தில் கட்டப்பட்டன. இவற்றை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதே வேளையில், பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் பூவண்ணன், முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல் செங்கம் அருகே பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்புழுதியூா் முறையாறு பகுதியில் ரூ. 2 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, மேல்புழுதியூா் முறையாறு பகுதியில், மாநில கூட்டுறவு ஒன்றியங்களின் முன்னாள் தலைவா் அமுதா அருணாசலம் தலைமையில் குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கி, மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கணேசன், மகரிஷி மனோகரன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமாா், சங்கா், பன்னீா், வேலூா் கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, திருவண்ணாமலை உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன், செங்கம் உதவிப் பொறியாளா் எபினேசா்அன்பு ஒப்பந்ததாரா் சிவாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.