சுரண்டையில் கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா-திமுக மாவட்ட செயலாளர்,எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்பு…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
சுரண்டை பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், ஆறுமுகச்சாமி, வளன்அரசு, வெங்கடேசன்,வைகை கணேசன், சசிகுமார், ராஜேந்திரன், சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதன்ராஜா அனைவரையும் வரவேற்றார்.
திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கழக கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு தென்னங்கன்று ,அரிசி மற்றும் காய்கறி ,பால் கேன்களை வழங்கப்பட்டது.மேலும் சுரண்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் நெடுஞ்சாலையில் 97 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கருணாநிதியின் உருவம் பதித்த முககவசம் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோபால்,பண்டாரம், பாபு, பூல் பாண்டியன், எழில் ,சங்கரேஸ்வரன், ஜேம்ஸ், தங்கவேலு, ராமர் ,பண்டாரசாமி, முத்து, சுப்பிரமணியன்,சரவணன்,சீனிவாசன், கோமதிநாயகம்,கொடி குமரேசன்,பிரேம்குமார், சேர்மன்,சீனித்துறை,முருகன்ராஜா, பவுன்ராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.