Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவி செய்த மனித நேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவி செய்த மனித நேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

தள்ளாடிய நிலையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு உதவும் விதமாக அவரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன். ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்து விட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிடாரக்குளம் ஊரின் வெளியே 80 வயது மூதாட்டி தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அவருக்கு உதவும் விதமாக வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காவல் ஆய்வாளரின் இத்தகைய மனிதாபிமானமிக்க இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!