சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர்த்து தமிழகம் முழுவதும் இன்று (16/05/2020) காலை 10 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டது.
இது மாலை 5 மணி வரை திறந்திருக்கும் எனவும் டோக்கன் முறையிலேயே மதுபானம் விற்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே குடிமகன்கள் மதுரையில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று மதுபானங்களை பெற்று சென்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 750 மில்லி அளவு ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் என அரசு உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது, மேலும் உச்சநீதிமன்றம் விதித்த வழிமுறையை பின்பற்றியே மதுபானங்கள் வழங்கப்படும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது மாலை 5 மணிவரை விற்க 500 டோக்கன் மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு மதுபான கடைக்கு வழங்கப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறை உரிய பாதுகாப்பு செய்துள்ள நிலையில், கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், வராத பட்சத்தில் அவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.