56
கம்பம் புதுப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உத்தமபாளையம் காவல்துறைக்ருத் தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி, முனியம்மாள் ஆகியோர் இறந்த மகாலட்சுமியின் உடலை பிரேத பரிசோதணைக்காக உத்தமபாளையம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கும் இவரது கணவர் பாலாவுக்கு திருமணம் முடிந்து 5 வயதில் ஒரு குழந்தை மட்டும் உள்ளது, கணவர் பாலா ஊட்டியில் கூலி வேலை செய்து வருகிறார். மகாலட்சுமி தன் குழந்தையுடன் தங்கியிருந்ததால், இறப்பிற்கான காரணம் குறித்து சார் ஆட்சியர் வைத்திநாதன் அவர்கள் நேரடி விசாரணை செய்து வருகிறார்.
செய்தி: பால் பாண்டி, தேனி..
You must be logged in to post a comment.