மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அன்னை தெரசா தெரு என்ஜிஒ காலனியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் வயது 40, மீனாட்சி வயது 37 ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் இன்று (20/05/2019) வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பெயரில் நாகமலை புதுக்கோட்டை காவலர்கள் வீட்டை உடைத்து பார்த்தபோது இருவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை அறிந்துள்ளனர். மேலும் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையினால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என அறியப்படுகிறது. இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.