23
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தாளாளர் கார்த்திக் தலைமையில் முதல்வர் சுரேஸ் கண்ணன் முன்னிலையில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய துணைத் தலைவர் சிவலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் சுந்தரபாண்டி ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.