ஜாக்டோ ஜியோ தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற் சங்கத்தினர் (ஏஜடியுசி) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரத்தில் ஜக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து திமுக., சிஐடியு .,ஏஐடியுசி.,உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில்,நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும், கைது செய்ப்பட்டு சிறையில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை எவ்வித நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும், அவர்களின் 9 அம்ச கோரிக்கைககளை அரசு நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். இதில் ஏராமான தொழிற்சங்க மாவட்ட தலைவர்கள் பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.
You must be logged in to post a comment.