Home செய்திகள் திருத்தங்கலில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 200 க்கு மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

திருத்தங்கலில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 200 க்கு மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

by mohan

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் நகராட்சிக்குட்ட 3 , 18, வது வார்டை சேர்ந்த பசும்பொன் நகர், பெரியார் காலனி, முத்துமாரி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது இந்த வார்டுகளில் கடந்த 1 மாத காலமாக குடிநீர் வழங்காத்தை கண்டித்து சுமார் 200 க்கு மேற்பட்ட பெண்கள் திருத்தங்கல் விருதுநகர் நெடுஞ்சாலையிலுள்ள நகராட்சி அலுவலக முன்பாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்

சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் சாலை மறியலை பொது மக்கள் கைவிட்டனர். பின்னர் நகராட்சி அலுவலகத்திற்க்கு சென்ற பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி பொறியாளர் ஜெயந்தி முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன பின்னர் முறையாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மறியல் மற்றும் போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!