
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய நகரம் இந்து முன்னணி சார்பில் வீரத்துறவி ராம.கோபாலன் ஜி முதலாம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கி ராமகோபாலன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும்ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆணிவேராக சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் செயல்பட்டுள்ளார்.அமரர் ராமகோபாலன்ஜிஆற்ற்றிய மகத்தான சேவை இந்துக்களால் என்றென்றும் நினைவு கூறப்பட்டது.ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் அரவிந்த் நகர தலைவர் ராஜா, துணைத் தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.