Home செய்திகள் செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் uஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது .செங்கம் அடுத்த செ.நாச்சிபட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை படிக்கும் 950 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு ள்ளது. இதனை ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் வெங்கடாஜலபதி தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 20ஆம் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுமுறையில் உள்ளனர். அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் கல்வித்தரம் அதிகரிக்கவும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது .இந்த வகுப்பு ஆனது மேலும் நாளொன்றுக்கு கல்லூரி பேராசிரியர்கள் மூலம் நேரத்தை அதிகரித்து அனைத்து பாடப்பிரிவுகளும் ஆன்லைன் மூலம் எடுக்கப்படும். கல்லூரி மாணவர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளை சிரமம் கருதாமல் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணிநேரம் கவனம் செலுத்தினால் போதும். குறிப்பாக இந்த வகுப்பு கிராமப்புற மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக கல்லூரி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!