Home செய்திகள் கொடைக்கானலில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..

கொடைக்கானலில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர், பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் பல்வேறு கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெய்,காப்பித்தூள், டீத்தூள், கலர் சாக்லேட்டுகள், தேன் உட்பட சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததோடு, காலவாதியான பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். என வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!