கீழக்கரை கடற்கரையில் கடல் அட்டை பறிமுதல்

கீழக்கரை கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த 80 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மீனவர்குப்பம் கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்குப்பம் கடற்கரை பகுதியில் சிப்பி கம்பெனி அருகில் 2 வாளிகளில் கடல்அட்டை இருப்பதை கண்டுபிடித்தனர்.

தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து கொண்டு வந்து மறைத்து வைத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டபோது எந்த தகவலும் தெரியவில்லை.

இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து கீழக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா


உதவிக்கரம் நீட்டுங்கள்..