Home செய்திகள் சாயல்குடியில் குடிநீர் நிறுத்தம் சாலை மறியல்

சாயல்குடியில் குடிநீர் நிறுத்தம் சாலை மறியல்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகமில்லை. விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை . இது தொடர்பாக சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் குடிநீர் தேடி அலைந்து திரிந்ததால் ஆவேசமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன்  பஸ் மறியலில் ஈடுபட்டனர். தகவல் படி சாயல்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, வி.ஏ.ஓ., ஜெயக்கொடி ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். தண்ணீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால்பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட வாகன போக்குவரத்து மீண்டும் தொடர்ந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!