கடந்த 23/12/2018 அன்று கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஆசிரியைகள், தலைமை ஆசிரியை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கான தலைவர் மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையான திட்டமிடலுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் மாணவியர்கள் தங்களுடைய பழைய நினைவுகளையும், அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக முன்னாள் மாணவிகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி, தொடர்ந்து இது போன்ற உதவிகள் செய்யப்படும் என வாக்களித்தனர். மேலும் போன்ற சந்திப்பு வருடந்தோறும் நடத்த முழு முயற்சிகளும் எடுக்கப்படும் என நிகழ்ச்சியின் குழுவினர் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.