Home செய்திகள் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது விளையாட்டு விழா

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது விளையாட்டு விழா

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (11.3.2020) காலை 9:30 மணியளவில் 32 வது விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் த.செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை தமிழ்நாடு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அமைப்பு பொருளாளர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல்சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத்கான் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து மாணவிகளின் அணிவகுப்பு, யோகா, சிலம்பம், ஏரோபிக்ஸ், பிரமிட்,100 மீ கோடு உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு செயலாளர் மாணவி கே.ஜனனி விளையாட்டுப் போட்டிக்கான உறுதிமொழி வாசித்தார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியை  முருகேஸ்வரி விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில சென்னை தமிழ்நாடு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அமைப்பு இளம் சாதனையாளர் கீதாரணி ஹர்சனா, சர்வேஸ் ஸ்வருப் சங்கர், கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி துணைமுதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள், தேர்வாணையர், பல்துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,2000க்கும்மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். விளையாட்டு செயலாளர் மாணவி ஆர்.தமிழ்வாணி நன்றி கூறினார். ஒட்டு மொத்த விருதை மரியம், முத்து சுலைஹா அணிகள், தனிநபர் விருதை பிஎஸ்சி கணிதம் மூன்றாமாண்டு மாணவி மதுமிதா (பாத்திமா அணி ) பெற்றனர். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான், உடற்கல்வி பேராசிரியை ஆர்.கலா செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!