23
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே புல்லந்தை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 54. சாயல்குடி கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மழையால் வலுவிழந்த மின் கம்பம் சாய்ந்து மின் கம்பி அறுந்து கிடந்தது.இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர், மின் கம்பியை கடந்தபோது மின்சாரம் பாய்ந்து கீழே சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு,கீழக்கரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார். ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.