10
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாக ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி கொண்டாடியது. இதையொட்டி விவசாயிகளுக்கு விதை நெல், மரக்கன்றுகள், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு வழங்கினார். ராமநாதபுரம் வட்டார தலைவர் ராஜகோபால், நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.