14
இணைப்பு என்ற பெயரில் 3500 தொடக்கப் பள்ளிகள், 3000 சத்துணவு மையங்கள மூடப்படும் அபாயத்தை கண்டித்து ஜாக் டோ-ஜியோ சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன், தமிழாசிரியர் கழக மாவட்ட அமைப்பாளர் குமாரவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.