Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடை திறப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடை திறப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் டாஸ்மார்க் கடை திறப்பு நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உலகம் முழுவதும் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நிலை கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக அமலில் உள்ளது. கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளை காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன. எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலத்தில் சென்று மது குடித்து வருவதை தொடர்ந்து தமிழக அரசும் இன்று முதல் அரசு மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.வயது வாரியாக மது விற்பனை செய்வதற்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.

அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் வீடுகளின் வாசலில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் டாஸ்மாக் கடைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!