8
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவர் சங்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அரவிந்த ராஜ் தலைவர் வகித்தார் . செயலர் கலிலூர் ரகுமான் முன்னிலை வகித்தார். பொருளாளர் மனோஜ்குமார், மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை அப்துல்லா, அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலர் முத்தரசன், முதுநிலை துணை தலைவர் மலையரசு, செயற்குழு உறுப்பினர் ஞானக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
You must be logged in to post a comment.