கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவில் மக்கிளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படும் உரக்கிடங்கினை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சட்ட ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ”ஊரடங்கில் உருவெடுக்கும் உயிர்க்கொல்லி ‘உரக்கிடங்கு’ கீழக்கரை பொதுமக்களே.. உஷார்..!” என்கிற தலைப்பில் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பரப்புரையில் பின்வரும் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. கொரானா ஊரடங்கால் நமது பொருளாதாரத்தை இழந்து, வாழ்வாதாரத்தை தொலைத்து துவண்டு போயிருக்கும் நம்முடைய கவலைகள் எல்லாம், கேள்விக்குறியாகி நிற்கும் நமது எதிர் காலத்தை நோக்கியே அச்சத்துடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இதை தாண்டி வேறு எதனையும் சிந்திக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்த மும்முரமாக காத்திருக்கிறது.
கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட புதுக் கிழக்குத் தெருவில் செயல்பட்ட அபாயகரமான குப்பை கொட்டும் தளத்தினை அப்புறப்படுத்தக் கோரி நடைபெற்ற பொது மக்களின் மாபெரும் எதிர்ப்பு போராட்டங்களால், கடந்த 18 ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடப்பில் கிடந்த மக்கள் விரோத திட்டத்தினை, நகர் மன்ற மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத இந்த சூழலில்,
You must be logged in to post a comment.