திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , சிலுக்குவார்பட்டி வேம்பன் குல கம்மாய் , கோட்டூர் ஊராட்சி கூலீஸ் ஈஸ்வரன் கம்மாய் , ஆகிய 4 ஊராட்சிகளில் 35 ஊரணி , 9 குளங்களும் தூர்வாரும் பணி தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து பணி யில் இருந்து 80 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மண்டல அலுவலர் சதீஷ் பாபு தலைமையில் துவங்கப்பட்டது.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர்கள், முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன் , உதவி செயற்பொறியாளர் வெற்றி வீரன், உதவிப் பொறியாளர் டெல்லி பாபு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, ஊராட்சி கழக செயலாளர்கள் ஜெயசீலன், விஜய பாலமுருகன், ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.