39
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்திற்குள் நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜான் என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரானா தோற்று நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று நீதிமன்றம் மூடப்பட்டது. ஏற்கனவே பல்வேறு சூழ்நிலையில் நீதிமன்றங்கள் மற்றும் அலுவலகப் பணிகள் கொரானா நோய் தேக்க நிலையில் உள்ள போது திடீரென நீதிமன்றம் மூடப்பட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.