14
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வட்டார தலைவர் ராஜ் மோகன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
வட்டார செயலாளர் சின்னராஜா வரவேற்று பேசினார்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன தற்காலிக பணியிடை நீக்கம் தமிழக அரசு ரத்து செய்திட வேண்டி நாள் அடையாள போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார் ,சிவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.