Home செய்திகள் நிலக்கோட்டையில் 500 குடும்பங்களுக்கு குமரப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி கொரானா நிவாரண உதவி

நிலக்கோட்டையில் 500 குடும்பங்களுக்கு குமரப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி கொரானா நிவாரண உதவி

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குமரப்ப செட்டியார் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பாக கொரானா வைரஸ் காய்ச்சல் பரவல் தடுப்பதற்கு ஊரடங்கு இருப்பதால் ஏழை , எளிய மக்களுக்கு உதவும் விதமாக துப்புரவு பணியாளர்கள், கொங்கர்குளம், கோட்டை , ஆகிய பகுதிகளில் கூலி வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி சிப்பம் 500 குடும்பங்களுக்கு பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு தலைமையில் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவரும், பள்ளி இயக்குனருமான சுந்தரம் ஆகியோர்கள் முன்னிலை வைத்தார் . தாசில்தார் யூஜின், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் அண்ணாமலை, நாகராஜன், தி.குமரப்பன், செ.குமரப்பன், சீனிவாசன் . பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!