Home செய்திகள் தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளிகளில்குடியரசு தின விழா.

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளிகளில்குடியரசு தின விழா.

by mohan

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் அருள்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை தலைமை வகித்தார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். தென்காசி சக்திநகர் சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் கே.அருள்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு குடியரசு தின உரையாற்றினார்.

தேசிய ஒருமைப்பாடு, குடியரசு, தேசிய தலைவர்கள் என்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பேசினர். விழாவில் உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com