14
ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் உள்ளூர் சிறு குறு தொழில்கள் மற்றும் வியாபாரிகள், அவர்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
தென்காசியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென்காசி மாவட்ட தலைவர் T.P.V.வைகுண்டராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.