நேரு நினைவுக் கல்லூரி சர்சிவி ராமன் விடுதி சார்பாக விடுதி விழா மற்றும் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியின் சர் சி வி ராமன் மகளிர் விடுதி சார்பாக விடுதி ஆண்டு விழா மற்றும் மகளிர் தினம் சனிக்கிழமை (07.03.20) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விடுதி தலைமை காப்பாளர் மற்றும் முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி மகளிர் தின வாழ்த்துகளுடன் வரவேற்றார். கல்லூரிக் குழு தலைவர் பொறியாளர் பொன் பாலசுப்பிரமணியன் பேசுகையில் விடுதி நண்பர்ககளிடம் மட்டுமே எல்லா தகவல்களையும் பகிந்து கொள்ள முடியும். நல்ல நண்பர்களை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று நண்பர்களின் முக்கியத்துவம் குறித்து தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு சேரன் குழு துவாக்குடி, நிர்வாக இயக்குனர் சிவசுப்ரமணியன் பேசுகையில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை செய்த சாதனைகளை சுட்டிக்காட்டினார். மாணவிகள் சிறந்த தொழில் முனைவோராக வரவேண்டும், அனைவரும் சிறப்பாக பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று பேசினார். விடுதியில் கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கதையை ஒப்புவித்தல் போட்டி, பாட்டுப் போட்டி, வினாடி வினா, விடுபட்ட எண்ணை கண்டுபிடித்தல், ஒளிப்பட விளக்கக்காட்சி, பேசும் படம்(mime), டிரம் சரத்(Dumb Charades) மற்றும் கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றன.
விடுதியின் சிறந்த (Miss CVR) மாணவியாக மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறையை சேர்ந்த சண்முகப்பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி பிரியதர்ஷினி நுழிழையையில் முதல் வாய்ப்பை தவற விட்டார். விடுதி மாணவிகள் சார்பாக விடுதியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசளித்தார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கல்விக்குழு உறுப்பினர்கள் அம்மா சிவனேஸ்வரி, மாலா பாலசுப்பிரமணியன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் போன்றோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.விடுதி காப்பாளர் மணிமேகலை நன்றியரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை விடுதிப் பணியாளர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.