15
இந்தியா முழுவதும் அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கீழக்கரையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மிகவும் வீரியமாக தொடங்கியுள்ளது. கீழக்கரையில் பல ஆண்டுகளாக சமூக காரியங்கள் செய்து வரும் வடக்கு தெரு பொதுமக்கள் இன்று (21/03/2020) கொரோனா விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வழங்குவதுடன் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் சூரணத்தை காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.