15
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார்.தனது மகள் திருமணத்தை வேலூர் நடத்த அவருக்கு 1 மாதம் பரோலை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. வேலூர் ரங்காபுரத்தில் திராவிடர் இயக்க பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சிங்காரயர் வீட்டில் தங்க அனுமதி தரப்பட்டது. அதன்படி 21-ம் தேதி நளினி பரோலில் வருவார் என்று தெரிகிறது. உடன் தாய் பத்மா அவருடன் தங்குவார்.நளினி கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.